ராமநாதபுரம், திண்டுக்கல் கலெக்டர்கள் மாற்றம்
சென்னை: ராமநாதபுரம், திண்டுக்கல் கலெக்டர்கள் மாற்றப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ஆர்.வாசுகி, விவசாயத்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரிய செயல் இயக்குநராக பணியாற்றிவரும் டி.என்.ஹரிகரன், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சி துணைக்கமிஷனராக (வருவாய் மற்றும் நிதி) பணியாற்றும் எம்.வள்ளலார், திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக ஆர்.கிர்லோஷ் குமாருக்கு பதிலாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஆர்.கிர்லோஷ்குமார், தொழில் துறை துணை செயலாளராக தீரஜ்குமாருக்கு பதிலாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
விடுமுறையில் சென்று திரும்பும் திண்டுக்கல் மாவட்ட கிராமப்புற வளர்ச்சி ஏஜன்சி திட்ட இயக்குநர் மற்றும் முன்னாள் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பூஜா குல்கர்னி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை துணை செயலாளராக எம்.மாலிக் பெரோஸ்கானுக்கு பதிலாக நியமிக்கப்பட்டு உள்ளார் என்று தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.