For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்வைன்-மகாராஷ்டிராவில் பள்ளிகள், தி.யேட்டர்கள் ஒரு வாரம் மூடல்

By Staff
Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் ஸ்வைன் ப்ளூ நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் பள்ளி கூடங்களுக்கு ஒரு வாரமும், தியேட்டர்களுக்கு மூன்று நாட்களும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பன்றி காய்ச்ச்ல் நோயின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி வருகிறது.

தற்போது புனேவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் உள்ள பள்ளிகள், தியேட்டர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஸ்வைன் ப்ளூ பள்ளிகள் மூலம் தான் வேகமாக பரவுகிறது என்பதால் பள்ளிகள் ஒரு வாரமும், தியேட்டர்களுக்கு மூன்று நாட்களும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதி. மேலும், பள்ளிகள் மூலம் ஸ்வைன் வேகமாக பரவி வருகிறது. இதனால் குழந்தைகளால் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. படிப்பை விட உடல்நலம் தான் முக்கியம் என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

புனேவில் ஏற்கனவே பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தியேட்டர்களுக்கும் அங்கு 3 நாள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை மேயருக்கு ஸ்வைன்?

இந்நிலையில் மும்பை மேயர் சுபா ராவுலுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதால், அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அது எந்த வகை காய்ச்சல் என்பது தெரியவில்லை. ஆனால், அவர் இன்று நடக்கும் மாநகராட்சியின் பொது குழு கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் என தெரிகிறது.

இது குறித்து மும்பை மாநகராட்சி ஆணையர் ஜெய்ராஜ் பதக் கூறுகையில்,

மேயர் இல்லை என்றால் பொது குழு கூட்டம் நடக்காமல் போய்விடாது. எனக்கு பன்றி காய்ச்சல் வந்தால் என்றால் மாநகராட்சி ஸ்தம்பித்துவிடாது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X