செங்கோட்டை: லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறும்பட இயக்குனர் பலியானார்.
செங்கோட்டை அருகேயுள்ள கட்டளைகுடியிருப்பை சேர்ந்தவர் வேலு முதலியார் மகன் வேலு அரசப்பன்.
இவர் சிறந்த குறும்பட இயக்குனருக்கான 1998ம் ஆண்டு தமிழக அரசு விருது பெற்றவர்.
நேற்று முன்தினம் சென்னையில் இருந்து தனது மாமாவுக்கு லாரியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு மதுரை நோக்கி தனியாக ஓட்டி வந்துள்ளார்.
மதுரை வேளாண்மை கல்லூரி அருகே மற்றொரு வாகனத்திற்கு வழி விடும்போது எதிர்பாரவிதமாக லாரி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேலு அரசப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
வேலு, ரஷ்யாவை சேர்ந்த நிறுவனங்களுக்கும் குறும்படம் எடுத்தும் அனுப்பி வந்தார். இவர் சேரனிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
இவருக்கு திருமணமாகி பேச்சியம்மாள் என்ற மனைவியும் சஞ்சீவ் வேலு மற்றும் 6 மாத கைக்குழந்தையும் உள்ளனர்.
இன்று மதுரை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
மதுரை ஓத்தகடை போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.