தொழில்நுட்பக் கோளாறு என்று கூறி பயணிகளை நோகடிக்கும் ஏர் லங்கா
விமான சேவையில் கொஞ்சம் நல்ல சர்வீஸ் என பெயர் பெற்று இருந்த ஏர் லங்கா ஏர்லைன்ஸ், கடந்த 10 தினங்களாக திருச்சியில் இருந்து செல்லும் அனைத்து ஏர் லங்கா சர்வீஸ்களும் மிகவும் காலதாமதமாக புறப்படுகின்றது. ஏன் காலதாமதம் என கேள்விக்கேட்டால் டெக்னீக்கல் பிரச்சினை என அப்பாவி பயணிகளிடம் ரெடிமேடு பதிலை கூறுகின்றார்கள்.
ஒருநாள் டெக்னீக்கல் பிரச்சினை என்றால் ஏற்றுக் கொள்ளமுடியும். ஆனால் கடந்த பத்து தினங்களாக ஒரே காரணத்தை கூறி பயணிகளை ஏமாற்றுகிறது ஏர்லங்கா.
இன்று எங்கள் விமானம் லேட் நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் விமான நிலையத்தில் இருக்கவேண்டும் என ஒரு நேரத்தை குறிப்பிட்டு பயணிகளுக்கு தெரியப்படுத்தலாம். அல்லது ட்ராவல் ஏஜண்ட்டுகளுக்கு தெரியப்படுத்தலாம். இதை இரண்டையும் விட்டுவிட்டு பயணிகளை நீண்ட நேரம் காக்கவைப்பது என்ன நியாயம்.
UL 132 என்ற எண்ணுள்ள ஏர்லங்கா காலை 9:30 புறப்படும் என்றால் குறைந்த பட்சம் பயணிகள் காலை 7:30க்கு விமான நிலையத்தில் இருக்கவேண்டும். இதற்கு குறைந்த பட்சம் 100 கி.மீ தொலைவில் உள்ள பயணிகள் அதிகாலை 5:00 மணிக்கு எல்லாம் தமது ஊரில் இருந்து புறப்படவேண்டும்.
சிலர் தங்களை வழியனுப்ப குடும்ப சகிதம் விமான நிலையம் வருவதும் உண்டு. மேற்படி விமானம் காலதாமதமாக புறப்படும் என்று முன்கூட்டியே பயணிகளுக்கு தகவல் தெரிவித்து இருந்தால் பயணிகளும் காலதாமதமாக தங்களின் ஊரிலிருந்து புறப்படுவார்கள்.
கடந்த மே 4 தேதி காலை 9:30 புறப்படவேண்டிய விமானம் இரவு 8:00 மணிக்குதான் புறப்பட்டது. மேற்படி விமானத்தில் செல்லும் பயணிகளை வழியனுப்ப வந்த குடும்பத்தினார் குழந்தைகளுடன் கொளுத்தும் கோடை வெயிலில் பெரிதும் சிரமப்பட்டனர்.
தகவல்: Madukkur TMMK Branch