For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜூன் 8ம் தேதி ராஜபக்சே டெல்லி வருகிறார்

Google Oneindia Tamil News

Rajapakse
டெல்லி: அதிபர் தேர்தலில் 2 வது முறையாக வெற்றி பெற்ற பின்னர் முதல் முறையாக ஜூன் 8ம் தேதி டெல்லி வருகிறார் ராஜபக்சே.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஜி15 மாநாடு நடைபெறுகிறது. இதற்காக அந்த குழுவில் இடம் பெற்றுள்ள நாடுளின் வெளியுறவு அமைச்சர்கள், தலைவர்கள் டெஹ்ரான் வந்து கொண்டுள்ளனர்.

நேற்று இந்திய, இலங்கை வெளியுறவு அமைச்சர்களான எஸ்.எம்.கிருஷ்ணாவும், ஜி.எல். பெரீஸும் சந்தித்துப் பேசிக் கொண்டனர். அப்போது ராஜபக்சேவின் இந்தியப் பயணம் குறித்து முடிவானது.

அரை மணி நேரம் இரு தலைவர்களும் பேசிக் கொண்டனர். அப்போது இலங்கையின் மறு சீரமைப்புப் பணிகள் குறித்து பேசினார்களாம்.

சந்திப்புக்குப் பின்னர் எஸ்.எம்.கிருஷ்ணா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜூன் 8ம் தேதி ராஜபக்சே இந்தியா வருவார் என்று தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X