For Daily Alerts
Just In
எட்டையுரம் அருகே லாரி தீப்பிடித்து எரிந்ததில் ரூ.25 லட்சம் சேதம்
எட்டையபுரம்: எட்டையபுரம் அருகே லாரி தீப்பிடித்து எரிந்ததில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.
ஓசூரில் இருந்து பிரிண்டிங் மை பேரல்களை ஏற்றிக் கொண்டு இன்று தூத்துக்குடி நோக்கி லாரி ஓன்று வந்து கொண்டிருந்தது. லாரி எட்டையபுரம் அருகே வந்தபோது லாரியில் இருந்த பிரிண்டிங் பேரலில் இருந்து திடீரென தீ ஏற்பட்டு லாரி முழுவதும் பரவியது.
லாரியை விட்டு கீழே குதித்த ஓட்டுனர் மோகன் என்பவர் இதுகுறித்து அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை பல மணி நேரம் போராடி அணைத்தும் லாரி மற்றும் மை பேரல்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின.
இதன் சேத மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து எட்டையபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Story first published: Wednesday, June 23, 2010, 15:33 [IST]