For Daily Alerts
Just In
பாகிஸ்தானில் இந்துக்கள் மீது தாக்குதல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்கள் வீடுளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கராச்சி அருகே மேமன்கோத் என்ற மலைப் பகுதியில் மசூதி ஒன்றின் வெளியே வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து தினேஷ் என்ற சிறுவன் தண்ணீர் குடித்துள்ளான். இதையடுத்து அந்தப் பகுதியினர் சிறுவனை தாக்கினர்.
மேலும் இந்துக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து அங்குள்ளவர்களை தாக்கினர். இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் ஜின்னா மருத்துவமனயில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள 400 இந்து குடும்பங்களையும் வெளியேறும்படி மிரட்டி வருவதாக காயமடைந்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Story first published: Tuesday, July 13, 2010, 18:39 [IST]