காமன்வெல்த் கேம்ஸ் வில்லேஜ் இப்போ பரவாயில்லையாம்-கூறுகிறது ஆஸி.
டெல்லி: காமன்வெல்த் போட்டிக்கான கேம்ஸ் வில்லேஜ் இப்போது சுத்தமாகவும், சுகாதாரமாகவும் திகழ்வதாக ஆஸ்திரேலிய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பெர்ரி கிராஸ்ஒயிட் கூறியுள்ளார்.
முதலில் சுத்தம் இல்லை, சுகாதாரம் இல்லை, கழிவு நீர் தேங்கிக் கிடக்கிறது, டாய்லெட்களில் மலம் தேங்கிக் கிடக்கிறது, சொறி நாய்கள் சுதந்திரமாக சுற்றுகின்றன, பாதுகாப்பு சரியில்லை என்று புலம்பி வந்தது ஆஸ்திரேலியா. தற்போது கேம்ஸ் வில்லேஜ் சிறப்பாக உள்ளதாக கிராஸ்ஒயிட் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது கேம்ஸ் வில்லேஜ் ஏற்றுக் கொள்ளும்படியாக உள்ளது. ஆஸ்திரேலிய அணியினர் போட்டியில் கலந்து கொள்வது உறுதி. கேம்ஸ் வில்லேஜிலும் அவர்கள் நிம்மதியாக தங்குவார்கள்.
தற்போது வில்லேஜை சிறந்த முறையில் பராமரிக்கத் தொடங்கியுள்ளனர். இது திருப்தி தருகிறது. குடியிருப்புப் பகுதிகளும் சிறந்த முறையில் உள்ளது. இருப்பினும் கீழ் தளத்தில் இன்னும் மழை நீர் தேங்கிக் கிடப்பதுதான் சற்று கவலை தருகிறது என்றார் கிராஸ்ஒயிட்.