காமென்வெல்த் சிக்கல்-ஜெயபால் ரெட்டி, கில்லுடன் பிரதமர் ஆலோசனை-ஷீலா தீட்சித்தும் பங்கேற்றார்
டெல்லி: காமன்வெல்த் விளையாட்டு தொடர்பாக எழுந்துள்ள பெரும் குழப்பம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி, விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய அமைச்சரவைச் செயலாளர் சந்திரசேகர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எஸ்.எஸ்.மேனன் ஆகியோரும் கலந்து கொண்டனர். டெல்லி துணை நிலை ஆளுநர் தேஜேந்திர கண்ணாவும் இதில் பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் போட்டிக்கான மைதானங்கள் எந்த அளவுக்கு தயாராகியுள்ளன என்பது குறித்து பிரதமர் விரிவா கேட்டார். மேலும், பல்வேறு குறைபாடுகள் குறித்து வரும் புகார்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.
அனைத்துப் பிரச்சினைகளையும் இன்றைக்குள் முடித்து விட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.