For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹோண்டுராஸ் கால்பந்து மைதானத்தில் 14 பேர் சுட்டுக் கொலை

Google Oneindia Tamil News

Honduras Firing
டெகுசிகல்பா (ஹோண்டுராஸ்) : ஹோண்டுராஸ் நாட்டின் வட பகுதியில் கால்பந்து மைதானத்தில் நடந்த மோதலின்போது மூண்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சான் பெட்ரோ சுலா என்ற இடத்தில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் கால்பந்துப் போட்டி நடந்தது. அப்போது திடீரென சிலர் மைதானத்திற்கு மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அனைவரது கையிலும் துப்பாக்கிகள் இருந்தன.

மைதானத்திற்குள் புகுந்த அவர்கள் போட்டியைப் பார்க்கத் தயாராகிக் கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் 14 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பத்து பேர் மைதானத்திலேயே உயிரிழந்தனர். மற்ற நால்வரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.

அப்பகுதியில் போதைப் பொருள் கடத்தல் மிகவும் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. இதுதொடர்பாக அடிக்கடி மோதல்கள் வெடிப்பது சகஜமாகும். மேலும் கோஷ்டி மோதல்களுக்கும் இப்பகுதியில் பஞ்சம் இல்லை. எனவே கால்பந்து மைதானத்தில் நடந்த துப்பாக்கிச் சூடும் இதுபோல ஒரு கோஷ்டி மோதலாகவே இருக்கும் என கருதப்படுகிறது.

சான் பெட்ரோ சுலா நகரில்தான் கோகைன் போதைப் பொருளை சுத்திகரித்து அதை அமெரிக்காவுக்கு பெருமளவில் கடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X