'மி்ஸ் கூவாகம்' பட்டம் வென்ற மதுரை ரம்யா!
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடந்தது. இன்று களப்பலி நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர்.
இந்த விழாவில் முக்கிய அம்சமாக மிஸ் கூவாகத்தை' தேர்வு செய்ய அழகிப் போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் சென்னை, சேலம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கோயம்புத்தூர், பெங்களூர், மும்பை, மைசூர், அஸஸாமைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அரவாணிகள் கலந்து கொண்டனர்.
இதில் மிஸ் கூவாகமாக மதுரையைச் சேர்ந்த ரம்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். பெங்களூர் பூமிகாவும், சென்னை ரகசியாவும் இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்தனர்.
பெற்றனர். இவர்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.3 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.