For Daily Alerts
Just In
தமிழகத்தில் விரைவில் மின் பற்றாக்குறைத் தீரும்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உறுதி
கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் புதிதாக ரூ.2.15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 எம்.வி.ஏ. திறன் கொண்ட டிரான்ஸ்மிட்டர் துவக்க விழா பிரகாசபுரம் துணை மின்நிலைய வளாகத்தில் நடந்தது.
இந்த விழாவிற்கு தலைமை பொறியாளர் சுந்தரம் தலைமை வகித்தார். கண்காணிப்பு பொறியாளர் குமரேசன், நகர் மன்ற தலைவர் கோவிந்தன், மாவட்ட கலெக்டர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய டிரான்ஸ்மிட்டரை துவக்கி வைத்து அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது,
தமிழகத்தில் மின் பற்றாக்குறையைப் போக்கத் தேவையான நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை வரும் மார்ச், ஆகஸ்ட், டிசம்பர் மாதங்களுக்குள் படிப்படியாக முழுமையாக நீங்கி உபரியாக இருக்கும் என்று நம்புகின்றேன் என்றார்.
Comments
English summary
Natham R. Viswanathan, Minister for Electricity and Prohibition and Excise has assured that power scarcity problem will be solved soon. CM Jayalalithaa is taking all necessary steps to put an end to this issue, he told.