For Daily Alerts
Just In
பியாந்த்சிங் கொலை வழக்கில் தூக்குதண்டனையை நிறுத்தக்கோரிய மனு தள்ளுபடி
சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பல்வந்த்சிங் ரஜோனாவின் தூக்குதண்டனையை நிறுத்தக் கோரி மனித உரிமை அமைப்பினர் தாக்கல் செய்த மனுவை அரியானா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
பியாந்த் சிங் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பஜ்வந்த் சிங் ரஜோனாவுக்கு வரும் 31-ந்தேதி பாட்டியாலா மத்திய சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சண்டிகார் கூடுதல் அமர்வு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மனித உரிமை அமைப்பினர் பஞ்சாப் மற்றும் அரியானா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரப்பட்டது.
இந்த வழக்கை அரியானா உயர்நீதிமன்றம் விசாரித்து தண்டனையை நிறுத்த கோரும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
English summary
The Punjab and Haryana High Court dismissed a PIL seeking stay on the death sentence of Balwant Singh, a co-accused in the assassination of former Punjab Chief Minister Beant Singh. A Division Bench of the High Court comprising Justice Hemant Gupta and Justice A N Jindal dismissed the PIL filed by lawyers for Human Rights International organisation
Story first published: Friday, March 23, 2012, 11:49 [IST]