For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோசடி நிறுவனத்தை காப்பாற்ற முயன்ற விவகாரம்: ஐ.ஜி. பிரமோத் குமார் கைது

By Siva
Google Oneindia Tamil News

கோவை: மோசடி நிதி நிறுவனத்தை காப்பாற்ற முயன்றதற்காக ஐ.ஜி. பிரமோத் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூரில் பாசி என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. அந்நிறுவனம் சுமார் ரூ.500 கோடி மோசடி செய்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மோசடி நிறுவனம் என்று பெயரெடுத்த பாசியை மேற்கு மண்டல ஐ.ஜி. பிரமோத் குமார் காப்பாற்ற முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு இது குறித்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள ஐ.ஜி பிரமோத் குமார் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். எந்த நேரத்திலும் தான் கைதாகலாம் என்று நினைத்த ஐ.ஜி. பிரமோத் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து டெல்லியில் வைத்து பிரமோத் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கோவை கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

English summary
West Zone IG Pramod Kumar, who is accused of trying to help a finance company that allegedly swindled Rs.500 crore, is arrested in Delhi. He will be brought to Coimbatore soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X