தோல்வி பயத்தால் புதுக்கோட்டையைப் புறக்கணிக்கும் திமுக - பாஜக குற்றச்சாட்டு
மதுரையில் மே 10, 11-ந் தேதி நடைபெறும் மாநில மாநாட்டுப் பணிகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பாஜக மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மீனாட்சி யாத்திரை, மதுரையில் மே 9-ந் தேதி நடைபெறும்.
கடந்த முறை தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்த போது நடைபெற்ற இடைத்தேர்தல்களில், அக்கட்சிதான் தொடர்ந்து வெற்றி பெற்றது. அதை பெரிய சாதனையாக, அக்கட்சித் தலைவர் கருணாநிதி தம்பட்டம் அடித்துக் கொண்டார்.
ஆனால், தற்போது இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியான அதிமுக வெற்றி பெறுவதை, அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால், தேர்தல் ஆணையத்தை அவர் குற்றம்சாட்டுகிறார். இடைத்தேர்தலில் அவருக்கு ஒரு நியாயம். மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா ?
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் கிடைத்த தோல்வி அவரை பெரிதும் பாதித்துவிட்டது. அந்த தோல்வி தொடர்வதை அவர் விரும்பவில்லை. தேர்தல் தோல்வி பயமே, புதுக்கோட்டை இடைத்தேர்தலை தி.மு.க. புறக்கணிக்க காரணம் என்றார் அவர்.