சிரஞ்சீவி மகளின் போயஸ் கார்டன் வீட்டில் ஐ.டி ரெய்ட்: சிக்கியது ரூ. 35 கோடி!!
இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நடிகர் சிரஞ்சீவியின் மூத்த மகள் சுஷ்மிதா. இவர் கணவர் விஷ்ணு பிரசாத்துடன் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று விஷ்ணு பிரசாத், அவரது தந்தை தொழில் அதிபர் சிவபிரசாத் வீடுகள், அலுவலகங்களில் சோதனையிட்டனர்.
நுங்கம்பாக்கம், தியாகராயநகர், தேனாம்பேட்டை, மைலாப்பூர் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது. மொத்தம் 35 பெட்டிகளில் பணம் சிக்கியது. ஒவ்வொரு பெட்டியிலும் ரூ.1 கோடி வரை இருக்கலாம் என்று தெரிகிறது.
கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடைபெற்றதில் வருமான வரித்துறையினர் 35 பெட்டிகளை எடுத்துச் சென்றனர். இதில் கணக்கில் வராத ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டு கட்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.35 கோடி. கையகப்படுத்திய ரூ.35 கோடி பணம் ரிசர்வ் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.
ஆளுங்கட்சி எம்பியான சிரஞ்சீவியின் மகள் - மருமகன் வீடுகளில் நடந்துள்ள இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.