ஆஸ்திரேலிய கொடியை வரைந்து டாப்லெஸ் போட்டோ எடுத்த இந்திய பாப் பாடகி
குவீன்ஸ்லேண்டில் வளர்ந்தவர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பாப் பாடகி ஆயிஷா சாகர். ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட்கோஸ்ட் குட்வில் அம்பாசிடராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் இந்தியாவில் கோல்ட் கோஸ்ட் நகரின் சுற்றுலாப் பெருமைகள் குறித்து விளம்பரம் செய்யவிருக்கிறார். இந்நிலையில் அவர் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்த போட்டோக்களை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் மேலாடை அணியாமல் ஆஸ்திரேலிய நாட்டுக் கொடியை தனது உடலில் வரைந்துள்ளார். இந்த புகைப்படங்களைப் பார்த்த இந்தியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த புகைப்படங்களால் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆயிஷா இப்படி டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளது இந்திய மக்களிடையே கோல்டு கோஸ்டின் இமேஜை கெடுத்துவிடும் என்று குவீன்ஸ்லேண்டைச் சேர்ந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நீரஜ நாராயண் தெரிவித்துள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளாக ஆயிஷா இந்தியாவில் வசிக்கிறார். ஆனால் அவ்வப்போது கோல்டு கோஸ்ட் சென்று மாதக்கணக்கில் தங்கிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய போட்டோக்கள் குறித்து ஆயிஷா கூறுகையில்,
இந்த போட்டோக்களை இணையதளத்தில் வெளியிட எடுக்கவில்லை. இந்தியாவில் எனது கெரியரை மேம்படுத்த எடுத்தேன். ஒரு ஆர்ட்டிஸ்டாக என்னை விளம்பரப் படுத்த எடுத்த போட்டோக்கள் அவை என்றார்.