For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணியக் கூடாது: ம.பி. அமைச்சர் விஜய்வர்கியா

By Siva
Google Oneindia Tamil News

போபால்: ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணியக்கூடாது என்று மத்திய பிரதேச மாநில தொழில் துறை அமைசச்ர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.

கடந்த 9ம் தேதி குவாஹாத்தியில் 20 ஆண்கள் சேர்ந்து ஒரு சிறுமியை நடுரோட்டில் வைத்து மானபங்கம் செய்த விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேச மாநில தொழில் துறை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில்,

ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணியக்கூடாது. பிறர் தங்களைப் பார்த்தாலே மதிக்கும் அளவுக்கு பெண்கள் உடைகள் இருக்க வேண்டும். அவர்களின் பேஷன், வாழ்க்கை முறை மற்றும் நடத்தை இந்திய கலாச்சாரத்தின்படி இருக்க வேண்டும்.

ஆனால் துரதிர்ஷடவசமாக பெண்களின் ஆடைகள் ஆண்களைத் தூண்டும் வகையில் உள்ளன என்றார்.

விஜயர்வர்கியா இது போன்று கருத்து தெரிவிப்பது இது ஒன்றும் முதல் முறையன்று. அவர் தன் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே பெண்களின் ஆடைகள் பற்றி பேசுவதாகக் கூறப்படுகிறது.

English summary
Kailash Vijayvargiya, the Industries Minister in Madhya Pradesh, is of the opinion that girls should be careful about their attire and ensure that it does not "provoke" others.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X