For Daily Alerts
Just In
சல்மான் குர்ஷித் ராஜினமா கோரி பிரதமர் வீட்டை முற்றுகையிட முயன்ற அர்விந்த் கெஜ்ரிவால் கைது
டெல்லி: மாற்றுத் திறனாளிகளுடன் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டை முற்றுகையிட முயன்ற சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் உத்தர பிரதேச மாநிலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அறக்கட்டனையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளைக்கு கிடைத்த பணத்தை சல்மான் குர்ஷித், அவரது மனைவி லூயிஸ் குர்ஷித் ஆகியோர் போலி கையெழுத்து போட்டு அபகரித்து கொண்டதாக கெஜ்ரிவால் புகார் கூறியிருந்தார். மேலும் இன்று சல்மான் குர்ஷித்தை டிஸ்மிஸ் செய்யக் கோரி பிரதமர் வீட்டை மாற்றுத் திறனாளிகளுடன் முற்றுகையிட முயன்றார் அர்விந்த் கெஜ்ரிவால். இதனால் அவரை தடுத்து நிறுத்தி டெல்லி போலீசார் கைது செய்தனர்.
Comments
English summary
The India Against Corruption (IAC) activist Arvind Kejriwal, who was to lead a group of 300-odd physically challenged people to the Prime Minister Manmohan Singh's residence, was detained by the police near the 7, Racecourse Road, in the capital on Friday. Apparently, the police rounded up Kejriwal and his supporters after they refused to clear the road despite warnings.
Story first published: Friday, October 12, 2012, 15:55 [IST]