For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்து தலைமறைவான 'அப்ரோ யேசுதாஸ்' பிடிபட்டார்!

By Mathi
Google Oneindia Tamil News

Aphro Trust
சென்னை: ரிசர்வ் வங்கியின் பெயரை பயன்படுத்தி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதி உதவி செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக அப்ரோ நிறுவனர் யேசுதாஸ் பெங்களூரில் சிக்கிவிட்டார். பெங்களூரில் கைது செய்யப்பட்ட அவர் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ரிசர்வ் வங்கியின் பெயரை விதிமுறைகளுக்குப் புறம்பாக பயன்படுத்தி விளம்பரம் செய்து, நிதி நிறுவனம் மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பு வெளியிட்டு, அதில் அப்ரோ நிறுவன மோசடியை அம்பலப்படுத்தியது.

இதனால் சென்னை மாநகர காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இதனிடையே குறைந்த வட்டியில் மகளிர் சுயவுதவிக் குழுக்களுக்கு கடன் தருவதாகக் கூறி பெண்களிடம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அப்ரோ நிறுவன நிர்வாகிகள் சிலர் மட்டுமே சிக்கினர். அப்ரோ நிறுவனர் யேசுதாஸ் தப்பி ஓடி தலைமறைவானார்.

அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் அவர் பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக சென்னை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெங்களூரு சென்ற சென்னை போலீசார் அப்ரோ யேசுதாஸை கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

English summary
Chennai Central Crime Branch police arrested the founder of Aphro Trust, which conned several Self Help Groups promising loans and other welfare aid to many.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X