For Daily Alerts
Just In
கருணாநிதி மீதான விஸ்வரூபம் அவதூறு வழக்கு...விசாரணை தள்ளிவைப்பு
விஸ்வரூபம் படம் வந்தபோது பெரும் பிரச்சினைகள் எழுந்தன. இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதி படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து முரசொலியில் அறிக்கை வெளியிட்டார்.
அதில் கூறப்பட்ட கருத்துக்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவதூறு ஏற்படுத்துவது போல உள்ளது என்று கூறி அரசு சார்பில் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது.
மேலும் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகியோரும் கருணாநிதி மீ்து அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் நேற்று சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Comments
English summary
Chennai sessions court has adjourned the hearing in a defamation case against Karunanidhi.
Story first published: Wednesday, July 3, 2013, 8:28 [IST]