அல்வா , சேவு , மக்ரூன், பால்கோவா மற்றும் பல sweetkhana.com வில் 1 க்ளிக்கில் வாங்கலாம்
நெல்லை: நெல்லை என்றால் நெல்லையப்பர் கோவிலும், விக்ரம் நடிச்ச சாமி படமும்தான் டக்கென்று மனதிற்கு நினைவுக்கு வரும். ஆனால் நாவுக்கு முதலில் நினைவுக்கு வருவது அந்த தகதகவென ஜொலிக்கும் அல்வாதான். இந்த அல்வாவை சுடச் சுட உங்களுக்கு வீடு தேடி வந்து தந்து அசத்துகிறார்கள் ஸ்வீட்கானா. காம் இணயைதளத்தினர்.
இந்த இணையதளமானது, தமிழகத்தின் பாரம்பரிய இனிப்புகள் மற்றும் ஸ்னாக்ஸ்களை விற்பனை செய்யும் ஆன்லைன் நிறுவனமாகும். நெல்லையைச் சேர்ந்த ஐந்து பொறியாளர்கள் இணைந்து இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளனர்.
தமிழகத்தின் பாரம்பரிய இனிப்பு வகைகளையும், ஸ்னாக்ஸ்களையும் உலகெங்கும் எடுத்துச் செல்லும் முதன்மையான நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டதே இந்த இணையதளம். உலகின் எந்த மூலையிலிருந்தபடியும் நமக்குப் பிடித்த பாரம்பரிய இனிப்பு வகைகளை இந்த இணையதளத்தில் ஆர்டர் செய்து பெறலாம்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நான்கு மாதத்திற்குள்ளாகவே முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது. சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி உள்ளிட்ட இந்திய நகரங்களிலும், சவூதி அரேபியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இந்த ஆன்லைன் விற்பனை தளத்திற்கு நிறைய வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர்.
தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் உள்ள முக்கிய மற்றும் முன்னணி இனிப்பு விற்பனையாளர்களுடன் ஸ்வீட்கானா.காம் ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் கேட்கும் இனிப்பு வகைகளை உடனுக்குடன் ஷிப்மென்ட் செய்வது எளிதாகியுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட இடத்திலிருந்தே கேட்கும் இனிப்பு வகைகளை அனுப்புவதும் சாத்தியமாகியுள்ளது. இதுதான் ஸ்வீட்கானா இணையதளத்தின் சிறப்பம்சமாகும்.
எனவே திருநெல்வேலி அல்வா வாங்க விரும்புவோர் நெல்லைக்கு வரத் தேவையில்லை. இருட்டுக் கடை அல்வாவைக் கூட இருந்த இடத்திலிருந்தே பெற முடியும். அல்வா மட்டுமல்ல, நூற்றுக்கும் மேற்பட்ட இனிப்பு வகைகளை இருந்த இடத்திலிருந்தே நாம் பெற முடியும்.
ஆன்லைனில் தற்போது பல விற்பனையாளர்கள் உள்ள போதிலும் அதில் பல போலிகளும் உள்ளனர். ஒரிஜினல் இனிப்பு வகைகளை அவர்கள் தருவதில்லை. ஆனால் ஸ்வீட்கானா அப்படி இல்லை. ஒரிஜினல் இனிப்பு வகைகளை மட்டுமே அவர்கள் அனுப்பி வைக்கிறார்கள். மேலும் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் தரமானவை, ஒரிஜினாலனவை என்பதை நிரூபிக்கும் தரச் சான்றிதழ்களுடன் அவர்கள் அனுப்பி வைக்கிறார்கள்.
தமிழகத்தில் தங்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சமீபத்தில் ஆந்திராவிலும் ஸ்வீட்கானா தனது சேவையைத் தொடங்கியது. இதன் மூலம் ஆந்திர மாநிலத்தின் பாரம்பரிய இனிப்பு உள்ளிட்ட வகைகளைப் பெற வசதி ஏற்பட்டுள்ளது. விரைவில் கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களிலும் ஸ்வீட்கானா தனது சேவையை விஸ்தரிக்கவுள்ளது.
எந்த சிக்கலும் இல்லாமல் ஸ்வீட்கானா மூலம் இனிப்பு வகைகளை ஆர்டர் செய்து பெற முடியும் என்பது முக்கியமானது. முயற்சித்துப் பாருங்கள்... விரும்பும் இனிப்பு வகைகளை ஆர்டர் செய்து பெற்று சந்தோஷமடையுங்கள்.
உங்களது கருத்துக்கள், ஆலோசனைகளை [email protected] என்று இமெயிலுக்கு அனுப்பி வைக்கலாம். உங்களது கருத்துகளுக்கும், யோசனைகளுக்கும் 24 முதல் 48 மணி நேரத்தில் பதில் வந்து சேரும்.