100 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து படுகொலை...பஞ்சாபில் பயங்கரம்!
பாட்டியாலா: நாடு முழுவதும் ஒரு வயது குழந்தை முதல் 100 வயது மூதாட்டிகள் வரை இன்றைக்கு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் 100 வயது மூதாட்டி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவின் உள்ள தாபு கலான் கிராமத்தில் 100 வயது மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் ஏரியில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதிவாசிகள் போலீசாரிடம் தகவல் அளித்தனர். நாடு முழுவதும் ஒரு வயது குழந்தை முதல் 100 வயது மூதாட்டிகள் வரை இன்றைக்கு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் 100 வயது மூதாட்டி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவின் உள்ள தாபு கலான் கிராமத்தில் 100 வயது மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் ஏரியில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதிவாசிகள் போலீசாரிடம் தகவல் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் அப்பகுதி அந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் அந்த மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாளில் மூதாட்டி வெளியில் படுத்து தூங்கியதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
வீட்டிற்குள் புழுக்கமாக இருப்பதாக கூறி காற்றுக்காக வீட்டிற்கு வெளியே திண்ணையில் படுத்து தூங்குவாராம் மூதாட்டி. வழக்கமாக வெளியில் தூங்குவது போல ஞாயிறன்றும் எனது பாட்டி வெளியில் படுத்திருந்தார். அதிகாலையில் ஏரியில் ரத்த வெள்ளத்தில் அவர் தலையில் அடிபட்டு இறந்து கிடந்தார் என்று அந்த மூதாட்டியின் பேரன் போலீசில் கூறியுள்ளார்.
மூதாட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதை ஆசாமிகள் யாரேனும் மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.