For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”என் மகள் மீண்டும் பள்ளி செல்வாள்” - பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமியின் தாய் நம்பிக்கை!

Google Oneindia Tamil News

சண்டிகர்: ஹரியானாவில் பலாத்காரத்திற்கு உள்ளான 12 வயது பெண் ஒருவரின் தாயார் அவரது மகள் மீண்டும் பள்ளிக் கூடத்திற்கு செல்வார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

ஹரியானா மாநிலம் கெய்தல் மாவட்டம் கர்னாலை சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 12 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுமிக்கு தந்தை இல்லை. தயார் ஒரு பியூட்டி பார்லரில் வேலைபார்த்து வந்து உள்ளார்.

சிறுமியின் தம்பி 6 ஆம் வகுப்பு படித்து வருகிறான். சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன் அவர் உடல் நலம் சரி இல்லை படுக்கையில் சுருண்டு, சுருண்டு படுத்து உள்ளார். தாயார் அவரிடம் என்ன ஏது என்று கேட்டு உள்ளார். ஆனால் அவர் பதில் கூற வில்லை.

சில நாட்களுக்கு பிறகு சிறுமி உடை மாற்றும் போது தாயார் அவரை பார்த்து உள்ளார். அவரது வயிற்று பகுதி பெரிதாக இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் சிறுமியிடம் கடுமையாக் விசாரித்து உள்ளார்.

அப்போது தான் சிறுமி நடந்த உண்மையை கூறி உள்ளார்.தான் கடந்த ஜூலை மட்டும் ஆகஸ்ட் மாதம் ஒரு வாலிபரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறி உள்ளார். உடனடியாக தாயார் போலீசில் புகார் செய்து உள்ளார்ர்.

பின்னர் மகளின் 7 மாத கர்ப்பத்தை கலைக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா ஹைகோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளார். ஆனால் இது மிகவும் தாமதமாகி விட்டது என கூறி அனுமதி ஹைகோர்ட் மறுத்து விட்டது.மேலும் கோர்ட் சிறுமியின் பிரசவ மருத்துவ செலவுகளை மாநில அரசுஏற்று கொள்ள உத்தரவிட்டு உள்ளது.

குற்றவாளி கெய்தால் மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார் என தாயார் கூறி உள்ளார்.

குற்றவாளியை போலீசார் கைது செய்து உள்ளனர்.ஆனால் குற்றவாளியின் தந்தை தனது மகனுக்கு 17 வயது தான் ஆகிறது என கோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளார். ஆனால் போலீசார் அவருக்கு 22 வயது ஆகிறது என நம்புகின்றனர்.

"எனது தாயார் நான் குழந்தை பிறந்து நன்றாக ஆனதும் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என கூறி உள்ளார். நான் எனது பள்ளி தோழிகளிடம் இது குறித்து என்ன கூற முடியும்.

எனக்கு விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற கனவு இருந்தது. தற்போது தான் என்னவாக வருவேன் என எனக்கு தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.

எனது மகள் பள்ளியில் நன்றாக படிக்க கூடியவள், அவள் விளையாட்டிலும் டான்ஸ் ஆடுவதிலும் விருப்பமாக இருந்தார். எனது மகள் எப்படியும் 8 ஆம் வகுப்புக்கு உரிய பரீட்சையை எழுதி வெற்றி பெறுவார் என நம்பிக்கை வைத்து உள்ளார் அவரது தாயார்.

English summary
Considered as one of the best students in the class, a Class VIII student who was raped a few months ago will be delivering a baby soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X