For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒடிஷா- ஆந்திரா எல்லையில் அதிரடி தேடுதல் வேட்டை- 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை!!

By Mathi
Google Oneindia Tamil News

மல்காங்கிரி: ஒடிஷா- ஆந்திரா எல்லையான மல்காங்கிரி வனப்பகுதியில் பதுங்கியிருந்த 18 மாவோயிஸ்டுகள், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 4 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 2 ரைபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஒடிஷா- ஆந்திரா மாநில எல்லையையொட்டி வனப்பகுதி மல்காங்கிரி மாவட்டம். மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இப்பகுதி இருந்து வருகிறது.

/news/india/19-maoists-killed-odisha-265552.html

ஒடிஷா, ஆந்திரா போலீசார் இணைந்து இன்று அதிகாலை நடத்திய தேடுதல் வேட்டையின் போது வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது.

/news/india/19-maoists-killed-odisha-265552.html

இதில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 4 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 2 ரைபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 2 போலீசார் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

/news/india/19-maoists-killed-odisha-265552.html

இது தொடர்பாக ஆந்திர பிரதேச காவல்துறை அதிகாரி ராகுல் தேவ் சர்மா கூறுகையில், மல்காங்கிரி எல்லையில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

/news/india/19-maoists-killed-odisha-265552.html

இந்த என்கவுண்ட்டரில் மாவோயிஸ்டுகளின் முக்கிய தளபதிகள் சிலர் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.

/news/india/19-maoists-killed-odisha-265552.html

இதேபோல கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடுதல் நடவடிக்கையில் 13 மாவோயிஸ்டுகளின் தளபதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

/news/india/19-maoists-killed-odisha-265552.html
English summary
19 maoists have been killed in an encounter with police at the Andhra-Odisha border.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X