For Daily Alerts
Just In
இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்த 20 இலங்கை மீனவர்கள் கைது
காக்கிநாடா: இந்திய கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 20 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் நிஷாம்பட்டினம் கடலோர பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது இந்திய கடல் பகுதியில் அத்துமீறி புகுந்து இலங்கை மீனவர்கள் 4 படகுகளில் மீன்பிடித்தது தெரியவந்தது.
உடனடியாக கடலோர காவல்படையினர் அவர்களை மடக்கி பிடித்தனர். அந்த படகுகளில் 20 மீனவர்கள் இருந்தனர். அவர்களை கைது செய்த கடற்படையினர் 4 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கைதான மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக காக்கிநாடாவில் உள்ள கடலோர காவல்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைதான மீனவர்கள் 20 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.
Comments
English summary
20 Sri lankan fishermen arrested by Indian navy near Andhra.
Story first published: Thursday, November 28, 2013, 11:14 [IST]