பத்து ஆண்டுகளில் கொதிக்கும் அனலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 61 % உயர்வு…
டெல்லி: கடந்த 2004- 2013 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 10 ஆண்டுகளில் கணக்கிடும் போது, வெப்பத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 61 % உயர்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது.
இந்த மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் கோடை வெப்பத்திற்கு 800 பேர் பலியாகியுள்ளதாகவும், அதில் ஆந்திராவில் 550 பேரும், தெலுங்கானாவில் 200 பேரும் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
மின்னலுக்குப் பிறகு 2 வது இயற்கை பேரிடர் கோடை வெப்பம் என்று கூறப்படும் நிலையில், 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையைக் கடக்கும் போது, சித்த பிரமை ஏற்பட்டு, உடல் கோமா நிலைக்கு தள்ளப்படுகிறது.
1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று 48 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
இதனால் நாட்டிலேயே ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தான் கோடை வெப்பத்திற்கு பலியானவர்களின் எணிக்கை உயர்ந்துள்ளது.