டெல்லி மெட்ரோ ரயிலில் 94% "பிக்பாக்கெட்" கேடிகள் பெண்கள்!
டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில்களில் பிடிபட்ட பிக்பாக்கெட் திருடர்களில் 94% பேர் பெண்கள் என்று மத்திய தொழில்பாதுகாப்புப் படையின் புள்ளி விவரங்களை மேற்கோள்காட்டி டெல்லி மெட்ரோ ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பொது மக்களிடம் பெண்கள் நைசாக பேசியும், இடித்தும் பிக்பாக்கெட் அடித்து விடுகின்றனராம்.
மெட்ரோ ரயில் பகுதிகளில் சுற்றிதிரிந்த சுமார் 293 பெண் பிக்பாக்கெட் கொள்ளையர்களை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பாக பெண்கொள்ளையர்களின் ஆதிக்கம் டெல்லி மெட்ரோ ரயில் பகுதிகளில்தானாம்.
கொள்ளைகார பெண்கள் வாடைக்கு குழந்தைகளை தத்து எடுத்துகொண்டும், குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது போன்று பயணிகளிடம் பர்சையோ பணத்தையோ நகையை பறித்து விட்டு சென்றுவிடுகின்றனராம்..
மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் கவனத்திற்காகவே பெண் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு குறித்து பயணிகளுகாக வாசகங்கள் ஒட்டபட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.