சீனாவில் கடுமையான நிலநடுக்கம்.. கட்டிடங்கள் குலுங்கின.. ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவு
பீஜிங்: தென் மேற்கு சீனாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கட்டிடங்கள் ஆடின, மக்கள் தெருக்களுக்கு ஓடி தஞ்சம் அடைந்துள்ளனர்.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று மாலை கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. குன்கையுவான் நகரை மையமாக வைத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7 என்ற அளவுக்கு இந்த நிலநடுக்கம் கடுமையானதாக இருந்ததால், கட்டிடங்கள் ஆட்டம் கண்டன. கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. வீட்டிலிருந்த பொருட்கள் கீழ விழுந்து நொறுங்கியுள்ளன.
Breaking: A 7.0-magnitude earthquake hit Jiuzhaigou County in southwest China's Sichuan Province at 9:19 p.m. Tuesday (Beijing Time). pic.twitter.com/sZ8xm8N8lq
— China Xinhua News (@XHNews) August 8, 2017
இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் உடனடியாக தெரியவில்லை. மீட்பு படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்துள்ளனர். சிச்சுவான் மாகாணத்தில் கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தின்போது சுமார் 70000 பேர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.