புதுச்சேரியில் ரவுடியை வீட்டுக்குள் புகுந்து வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்
புதுச்சேரி : ரவுடி ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள நாகம்மாள் கோயில் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற காக்காமணி, கொத்தனாராக பணியாற்றி வந்தார். நேற்று பிற்பகல் அவர் வீட்டில் உணவருந்திவிட்டு, மீண்டும் பணிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, மணிகண்டனை கண்காணித்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வீட்டிற்குள் புகுந்து, அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
இதில் படுகாமயடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த லாஸ்பேட்டை காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன் விரோதம் காரணமாக இக்கொலைச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.