திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட் பெற ஆதார் எண் கட்டாயம்!
திருப்பதியில் தரிசன டிக்கெட் பெற இனி ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி: ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பதி திருமலையில் தங்கும் அறைகளுக்கும் இனி ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறுவதற்கு மட்டுமின்றி அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளது. மதிய உணவு, மருத்துவ சேவை என அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் அட்டை இல்லை என்றால் எந்த வேலையும் ஆகாது என்றாகிவிட்டது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பதி திருமலையில் தங்கும் அறைகளுக்கும் இனி ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திருப்பதியில் லட்டு வாங்குவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது