டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி ஆதரவு!!
தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
டெல்லி: தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி தமிழக விவசாயிகளை சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் இன்று 15வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் நேற்று எலிக்கறி சாப்பிடும் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது விவசாயிகளின் பிரச்சனைகளை அவர் கேட்டறிந்தார்.