பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய என்ஜினியரை செருப்பால் அடித்த திருப்தி தேசாய்: வீடியோ இதோ
புனே: புனேவில் திருமணம் செய்வதாக வாக்களித்து இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய நபரை புமதா பிரிகேட் அமைப்பை சேர்ந்த திருப்தி தேசாய் நடுத்தெருவில் வைத்து செறுப்பால் அடித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் என்ஜினியராக வேலை செய்பவர் ஸ்ரீகாந்த் லோந்தே. அவர் அதே நிறுவனத்தில் வேலை செய்யும் இளம்பெண்ணிடம் அவரை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்துள்ளார்.
#WATCH: Bhumata Brigade activist Trupti Desai thrashed a man for allegedly breaking marriage promises,in Pune (Maha)https://t.co/KC4ZXOY4gH
— ANI (@ANI_news) July 27, 2016
இதையடுத்து ஸ்ரீகாந்த் அந்த பெண்ணுடன் உறவு கொண்டதில் அவர் கர்ப்பமானார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கேட்டதற்கு ஸ்ரீகாந்த் மறுத்தார். இதைத் தொடர்ந்து அந்த பெண் மும்பையை சேர்ந்த புமதா பிரிகேட் அமைப்பின் தலைவர் திருப்தி தேசாயை அணுகி தன்னை பற்றி தெரிவித்தார்.
பெண்கள் நுழைய தடை செய்யப்பட்டிருக்கும் கோவில்களுக்குள் நுழையும் திருப்தி தேசாய் புனேவில் நடுத்தெருவில் வைத்து ஸ்ரீகாந்தை தனது செறுப்பால் அடித்து நொறுக்கினார். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணை ஏமாற்றியவறுக்கு தக்க பாடம் கற்பித்துள்ளதாக திருப்தி தெரிவித்துள்ளார்.