செய்தியாளர்களுக்கு சுந்தர தெலுங்கில் பேட்டியளித்த நடிகர் கார்த்தி - வீடியோ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் கார்த்தி தெலுங்கில் அசத்தலாகப் பேசி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
திருப்பதி: நடிகர் கார்த்தி தான் நடித்துக்கொண்டிருக்கும் காக்கி திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்ற வேண்டுதலுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பிறகு செய்தியாளர்களுக்கு தெலுங்கில் பேட்டியளித்தார்.
நடிகர் கார்த்திக் தற்போது காக்கி என்ர திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என தெரிகிறது. இப்படம் வெற்றிய அடைய வேண்டும் என்பதற்காக கார்த்தி திருப்பதி ஏழுமையான் கோயிலுக்கு சுவாமி தரிசனத்துக்காக வந்தார்.
அங்கு அவர் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் சென்று சுவாமியை தரிசனம் செய்தார். பின்பு செய்தியாளர்களுக்கு தெலுங்கில் பேட்டியளித்தார். அப்போது தெலுங்கில் மிக சரளமாகப் பேசினார். 'காக்கி' திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்ற வேண்டுதலுடன் திருப்பதிக்கு வந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்த நான் தற்போது தான் மீண்டும் வந்துள்ளேன் என சுந்தர தெலுங்கில் பேட்டியளித்தார்.