கார் விபத்தில் காப்பாற்றிய மருத்துவருக்கு விருந்து அளித்த நடிகை ஹேமமாலினி
மும்பை: நடிகையும் பாஜனதா எம்பியுமான ஹேமமாலினியின் கார் கடந்த மாதம் விபத்து ஒன்றில் சிக்கியது அனைவரும் அறிந்த செய்தியே, அவரது கார் மோதியதில் சிறு குழந்தை ஒன்று இறந்து போனது.
இந்த விபத்தில் நடிகை ஹேமமாலினியும் படுகாயம் அடைந்தார் காரில் படுகாயம் அடைந்த ஹேமமாலினியை அந்த வழியாக காரில் வந்த சிவ்குமார் சர்மா என்பவர் மீட்டு அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.
தற்போது முழுவதும் குணம் அடைந்த நடிகை ஹேமமாலினி தன்னை விபத்தில் இருந்து காப்பாற்றிய மருத்துவரை கவுரவிக்க விரும்பினார். இதையடுத்து அவர் டாக்டர் சிவ்குமார் சர்மாவை தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர் ஜூகுவில் உள்ள நடிகை ஹேமமாலினியின் வீட்டுக்கு வந்தார். அவரை குடும்பத்தினருடன் சேர்ந்து வரவேற்ற நடிகை ஹேமமாலினி, டாக்டர் சிவ்குமார் சர்மாவிற்கு அறுசுவை விருந்து அளித்தார்.
பின்னர் தன்னை விபத்தின்போது மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்ததற்காக நன்றி தெரிவித்து கொண்டார், மேலும் டாக்டர் சிவ்குமார் சர்மாவுக்கு அன்பளிப்புகள் வழங்கியும் கவுரவித்தார்.