டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிக வாபஸ்! அரசுக்கு ஒரு மாதம் கெடு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கோரிக்கைகளை மதித்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்த
டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறபட்டது.
கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் கேட்டு அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் 41 நாட்களாக போராடி வந்தனர். அதே நேரம் இன்னும் 30 நாளில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே மே 25ம் தேதிவரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக அய்யாக்கண்ணு கூறினார்.
போராட்டத்தில் பங்கேற்றவர்களுடன் கலந்து பேசியபிறகு அய்யாகண்ணு இம்முடிவுக்கு வந்துள்ளார். எங்களின் போராட்டத்தின் விளைவாக முதல்வர் எங்களை சந்தித்தார் என்றும் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் மே 25ம் தேதி மீண்டும் போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 25ம் தேதி தமிழகத்தில் நடைபெறும் முழு அடைப்பு போராடத்தில் பங்கேற்க டெல்லியில் இருந்து தமிழகம் திரும்புகின்றோம் என்றும் அவர் கூறினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கோரிக்கைகளை மதித்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாம்பு, எலி கறி சாப்பிடுவது, நிர்வாணமாக ஓடுவது, சிறுநீரை குடித்தது என இந்தியாவையே இவர்களது போராட்டம் திரும்பி பார்க்கச் செய்தது குறிப்பிடத்தக்கது.