For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் 'ஈ': பயணி புகார்

By Siva
Google Oneindia Tamil News

கொல்கத்தா: காத்மாண்டுவில் இருந்து கொல்கத்தா வந்த ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் ஈ இறந்து கிடந்ததாக பயணி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று சனிக்கிழமை கொல்கத்தாவுக்கு கிளம்பியது. அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் ஈ இறந்து கிடந்ததாக பயணி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

AI passenger claims insect in on board meal

இந்நிலையில் இது குறித்து ஏர் இந்தியா கூறுகையில்,

உணவில் ஈ இருந்ததாக கூறிய பயணி அதை சோதனைக்காக அளிக்கவில்லை. ஈ இருந்ததா என்பதை கண்டறிய அந்த உணவை திருப்பி அளிக்குமாறு கேட்டும் பயணி அளிக்கவில்லை. அதனால் உணவில் ஈ இருந்ததை உறுதிப்படுத்த முடியாது என்றது.

முன்னதாக கடந்த மாதம் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த ஒருவரின் உணவில் பல்லி கிடந்ததாக புகார் எழுந்தது. ஆனால் அந்த புகார் பொய் என்று ஏர் இந்தியா அதிகாரிகள் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A passenger on board an Air India flight from Kathmandu reportedly found a "housefly" in the meal served to him during the journey, but the airline said that no sample of the food item was submitted to it for verifying the claim.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X