டெல்லியில் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளனது- 5 பேர் காயம்
டெல்லி: டெல்லி அருகே சிறிய ரக ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று இயந்திர பழுது காரணமாக அவசரமாக தரையிரக்க முயன்றபோது கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
பீகாரின் பாட்னாவிலிருந்து டெல்லிக்கு 7 பேருடன் சிறிய ரக ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்டது. டெல்லியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலையில் உள்ள நஜாஃப்கர் பகுதியில் விமானம் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து விமானிகள் விமானத்தை அவசரமாக தரையிரக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் விமானம் கிழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 7 பேரும், ராவ் துலாராம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றன.