நேபாளத்தில் தவிக்கும் 131 பயணிகள்.. கட்டுப்பாட்டு அறை திறந்த ஆந்திரா, தெலங்கானா!
டெல்லி: நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தங்கள் மாநிலத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில அரசுகள் கட்டுப்பாட்டு அறைகளை திறந்துள்ளன.
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த சுமார் 131 பேர் நேபாள தலைநகர் காத்மாண்டுவிற்கு சுற்றுலாநிமித்தமாக சென்றிருந்தனர்.
இந்நிலையில், நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அவர்கள் அங்கேயே தங்க வேண்டிய நிரந்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கும், உறவினர்களுக்கும் உதவி செய்வதற்காக டெல்லியிலுள்ள ஆந்திர பவனில், ஆந்திரா மற்றும் தெலங்கானா அரசுகள் கட்டுப்பாட்டு அறைகளை திறந்துள்ளன.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஆகியோர் இந்த ஏற்பாடுகளை தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி மேற்பார்வையிடுகின்றனர்.