டெல்லியில் ஒபாமா: 'ஜெய் ஹிந்த்' என ட்வீட் செய்த வெள்ளை மாளிகை
டெல்லி: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வந்துள்ள நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஜெய் ஹிந்த் என்று ட்வீட் செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தனது மனைவி மிஷலுடன் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று காலை டெல்லி வந்தார். பிரதமர் மோடி ஒபாமாவை விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர் ராஷ்ட்ரபதி பவன் வந்த ஒபாமாவுக்கு 21 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
President Obama is honored to be back in #India to celebrate Republic Day and to begin a new chapter in the US-India partnership. Jai Hind!
— @NSCPress (@NSCPress) January 25, 2015
குடியரசு தினத்தை கொண்டாடவும், இந்திய-அமெரிக்க உறவில் புதிய சகாப்தத்தை துவங்கவும் மீண்டும் இந்தியா வந்துள்ளதை ஒபாமா கௌரவமாக நினைக்கிறார். ஜெய் ஹிந்த்! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சூசன் ரைஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
Excited to be with President Obama in #India to celebrate Republic Day – Jai Hind!
— Susan Rice (@AmbassadorRice) January 25, 2015
குடியரசு தினத்தை கொண்டாட அதிபர் ஒபாமாவுடன் உடன் இந்தியாவில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - ஜெய் ஹிந்த்! என்று தெரிவித்துள்ளார்.