For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைக் கோள்... 28 ஆம் தேதி விண்ணில் பாய்கிறது ‘ஆஸ்ட்ரோசாட்'

Google Oneindia Tamil News

பெங்களூரு : இந்தியாவின் முதலாவது விண்வெளி ஆய்வு செயற்கைக் கோளான ‘ஆஸ்ட்ரோசாட்'வரும் 28-ம் தேதி பிஎஸ்எல்வி சி-30 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆகஸ்ட் மாதம், தகவல் தொடர்புக்கு உதவும் ஜிசாட்-6 செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி-டி-6 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

astrosat

இந்த நிலையில், இந்தியாவின் முதலாவது விண்வெளி ஆய்வு செயற்கைக் கோளான ‘ஆஸ்ட்ரோசாட்'வரும் 28-ம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-30 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

ஒன்றரை டன் எடை கொண்ட ஆஸ்ட்ரோசாட் செயற்கைக் கோளுடன் கனடா மற்றும் இந்தோனேசியாவின் 2 சிறிய செயற்கைக் கோள்கள், அமெரிக்காவின் 4 நானோ செயற்கைக் கோள்கள் என மொத்தம் 6 செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன.

ஆஸ்ட்ரோசாட் செயற்கைக் கோளானது, புறஊதாக்கதிர்கள் மற்றும் எக்ஸ்-ரே கதிர் மண்டலங்கள் கொண்ட விண்வெளிப் பகுதியை ஆய்வு செய்யும். பால்வெளி வீதியில் உள்ள கருந்துளை குறித்தும் அந்த செயற்கை கோள் ஆராயும்.

விண்வெளி ஆராய்ச்சித் துறையில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய 3 நாடுகள் மட்டுமே இதுவரை விண்வெளி ஆய்வு செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளன. ஆஸ்ட்ரோசாட் செயற்கைக் கோள் வெற்றிகரமாக ஏவப்படும் பட்சத்தில் இந்த பட்டியலில் இந்தியா 4-வது நாடாக இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Astrosat-India's first dedicated astronomy satellite launch is scheduled for 28th September '15 at 10:00 am from Sriharikota, Andhra Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X