ஆடிக்கிருத்திகை.. தமிழ் பேனர்களை கிழித்த கன்னட அமைப்பினர் - பெங்களூருவில் பதற்றம்
பெங்களூருவில் வைக்கப்பட்டிருந்த தமிழ் பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து வீசியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில் தமிழ் அமைப்பினர் வைத்திருந்த ஆடிக்கிருத்திகை நல்வாழ்த்துக்கள் என்ற பேனரை கன்னட அமைப்பினர் கிழித்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
பெங்களூருவில் புலிகேசி நகரில் சுதந்திர தினம், ஆடிக்கிருத்திகை பண்டிகை முன்னிட்டு நேற்று தமிழ் அமைப்பினர் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர்.
அதில் ஆடிக்கிருத்திகை நல் வாழ்த்துக்கள் என்று தமிழில் எழுதப்பட்டிருந்தது. இந்த பேனர்களை கன்னட் அமைப்பினர் கிழித்தனர்.
கர்நாடகாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மெட்ரோ ரயில் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்களை அழித்தனர். இப்போது தமிழ் எழுத்துக்களை கிழித்துள்ளனர். இதனால் பெங்களூருவில் பதற்றம் எழுந்துள்ளது.
Karnataka Rakshana Vedike members cut out content printed in Tamil from posters put up in #Bengaluru's Pulakeshinagar. pic.twitter.com/Qiuh2WXJ1K
— ANI (@ANI) August 16, 2017
அண்மையில் வங்கிகளில் பணிபுரிபவர்கள் கட்டாயம் கன்னடம் பயில வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.