For Daily Alerts
Just In
“ஏ.பி.ஜே.அப்துல் கலாம் வேளாண்மை பல்கலைக்கழகம்”- பெயர் சூட்டி இறுதி அஞ்சலி செலுத்திய பீகார் முதல்வர்!
பாட்னா: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் நினைவாக பீகாரில் செயல்பட்டு வரும் கிஷன்கஞ்ச் வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட உள்ளது.
முன்னாள் குடியரசுத்தலைவரும், இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவருமான அப்துல் கலாம் அவர்கள் மேகாலயாவின் ஐ.ஐ.எம் கல்லூரியில் உரையாற்றிய போது மயங்கி விழுந்தார். ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மாரடைப்பால் காலமானார்.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் கலாமின் பெயரில் "ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வேளாண்மை பல்கலைக்கழகம்" என மாற்றியமைப்படுவதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில் பீகாரின் கிராமப்புற வளர்ச்சியில் கலாம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததாகவும், பீகார் எப்போதும் அவரது இதயத்திற்கு மிக நெருக்கமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Comments
English summary
Bihar Chief Minister Nitish Kumar on Monday announced that state government had decided to rename the Kishanganj Agriculture University after former President of India and renowned scientist APJ Abdul Kalam.
Story first published: Wednesday, July 29, 2015, 8:25 [IST]