For Daily Alerts
Just In
ஹரியானாவில் பேருந்தில் குண்டு வெடிப்பு- 12 காயம்
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் பேருந்து ஒன்றில் குறைந்த தீவிரமுள்ள குண்டு வெடித்ததில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் பிப்லி மாவட்டத்தில் உள்ள சோனிபட் நகரிலிருந்து புறப்பட்டு சண்டிகர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் இருந்த குண்டு வெடித்ததால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதில்12 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. காயமடைந்தவர்கள் அனைவரும் குருஷேத்ரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால் பேட்டரி போல இருந்த பொருள் வெடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து, தடயவியல் நிபுணர்களும்,வெடிகுண்டு சோதனை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
Comments
English summary
An "low-intensity" blast took place in a Haryana Roadways bus on Thursday afternoon, reports said. At least 12 passengers have been injured in the incident, according to the police.
Story first published: Thursday, May 26, 2016, 19:30 [IST]