பிரியங்காவை அழைத்து வந்து கட்சியை காப்பாற்றுங்கள்: டெல்லியில் காங்கிரஸார் போராட்டம்
டெல்லி: பிரியங்கா காந்தியை அழைத்து வந்து கட்சியை காப்பாற்றுமாறு காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் இரு மாநிலங்களிலும் பாஜகவின் கையே ஓங்கி உள்ளது. பல இடங்களில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதுடன் வெற்றியும் பெற்று வருகிறார்கள்.
ஹரியானாவிலும் சரி, மகாராஷ்டிராவிலும் சரி காங்கிரஸின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவுகளை பார்த்த கட்சியினர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு கூடினர்.
அவர்கள் தங்கள் கைகளில் பிரியங்காவை அழைத்து வந்து கட்சியை காப்பாற்றுங்கள் என்ற வாசகம் அடங்கிய பலகைகளை வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சியை பிரியங்கா காந்தியால் தான் காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு கட்சியினர் வந்துள்ளனர்.