For Daily Alerts
Just In
கொல்கத்தாவில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து.... இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணிகள் தீவிரம்
மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் கட்டடம் இடிந்து விழுந்ததை அடுத்து அந்த இடிபாட்டில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
கொல்கத்தா: கொல்கத்தாவின் பௌபஜாரில் உள்ள ஒரு கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கொல்கத்தாவில் உள்ள பௌபஜாரில் ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது. இதைத் தொடர்ந்து அந்த இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எதனால் இந்த கட்டடம் இடிந்து விழுந்தது உள்ளிட்ட காரணங்கள் தெரியவில்லை.
Comments
English summary
A building collapsed in central Kolkata’s Bowbazar area and many are feared trapped.
Story first published: Tuesday, July 25, 2017, 15:18 [IST]