For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் பாக். மீண்டும் அத்துமீறல்- தொடரும் இந்திய ராணுவ பதிலடி!!

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் 2-வது நாளாக இன்றும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தினர் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தனர். இதில் 30-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Ceasefire violation by Pakistan in JK

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு-காஷ்மீர் அக்னூர் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

இன்று காலை 4 மணியளவில் காஷ்மீரின் அக்னூர் அருகே உள்ள பல்லன்வாலா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து இருதரப்பிலும் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதனால் இருநாட்டு எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

English summary
Ceasefire violation by Pakistan in Pallanwala sector of Akhnoor (J&K) started around 4 am, firing still going on.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X