காஷ்மீரில் பாக். மீண்டும் அத்துமீறல்- தொடரும் இந்திய ராணுவ பதிலடி!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் 2-வது நாளாக இன்றும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தினர் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தனர். இதில் 30-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு-காஷ்மீர் அக்னூர் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.
இன்று காலை 4 மணியளவில் காஷ்மீரின் அக்னூர் அருகே உள்ள பல்லன்வாலா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து இருதரப்பிலும் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதனால் இருநாட்டு எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.