For Daily Alerts
Just In
மோடிக்கு இரங்கல் தெரிவித்த சட்டிஸ்கர் முதல்வர்!
டெல்லி: சட்டிஸ்கர் முதல்வரும், பாஜகவைச் சேர்ந்தவருமான ரமன் சிங் மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்குப் பதிலாக அவர் பிரதமர் மோடிக்கு இரங்கல் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கலாமுக்கு இரங்கல் தெரிவித்து அவர் பேசுகையில், மதிப்புக்குரிய மோடிஜியின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வாய் தவறிக் கூறியுள்ளார் ரமன் சிங். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
ஆனால் ரமன் சிங் வாய் தவறுவது இது முதல் முறையல்ல. கடந்த வாரம் பகத் சிங்குக்கு அஞ்சலி செலுத்துவது தொடர்பாக வெளியிட்ட டிவிட்டர் செய்தியில் அவரது படத்திற்குப் பதிலாக சந்திரசேகர் ஆசாத்தின் படத்தைப் போட்டிருந்தார். பின்னர் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
Comments
English summary
In a fresh faux pas, Chhattisgarh Chief Minister and BJP leader Raman Singh offered his condolences to the Modiji instead of Dr. APJ Abdul Kalam. “I express my condolences on the death of respected Modi ji,” he was heard in a video that is doing the rounds on social media.
Story first published: Thursday, July 30, 2015, 17:53 [IST]