விமான மேம்பாட்டு அமைப்பு இயக்குநராக தேவநாத் பாலாஜி நியமனம்
பெங்களூர்: ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு அமைப்பின் இயக்குநராக கடபா தேவநாத் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். சிறிய வகை விமானங்களுக்கு இவர்தான் திட்ட இயக்குநராகவும் செயல்பட உள்ளார்.
அப்பதவியில் இருந்த சுப்பிரமணியம், கடந்த மாதம் 30ம் தேதியுடன் ஓய்வு பெற்றதால், அவரிடத்துக்கு பாலாஜி வந்துள்ளார். பாலாஜி ஓய்வு பெற இன்னும் இரு வருட காலங்கள் உள்ளதால், அவர் இப்பதவியில் தொடருவார் என்று எதிர்பார்க்கலாம்.
1957ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி பிறநத் பாலாஜி, மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார். இந்திய கடல்படையில் 1978ம் ஆண்டு சேர்ந்த பாலாஜி, அடுத்த மூன்றாவது ஆண்டில், விமானம் தாங்கி போர்க்கப்பலான விக்ராந்த்தின், ஏர் இன்ஜினியர் ஆபீசராக பணியாற்றினார்.
கடல்படை திட்ட இயக்குநர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்த பாலாஜி, 2006ல் கடல்படையை விட்டுவிட்டு ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு அமைப்பில் இணைந்தவராகும்.