ராகுல் இன்னும் முதிர்ச்சியடையவில்லையா? ஷீலா தீட்சித் கருத்தால் சர்ச்சை!
ராகுல் காந்தி இன்னும் முதிர்ச்சியடையவில்லை என டெல்லி மாஜி முதல்வர் ஷீலா தீட்சித் கூறிய கருத்தால் சர்ச்சை வெடித்துள்ளது.
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்னும் முதிர்ச்சியடையவில்லை என டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக ஷீலா தீட்சித் முன்னிறுத்தப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் திடீரென சமாஜ்வாதி- காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டது.
இதில் ஷீலா தீட்சித் கடும் அதிருப்தி அடைந்தார். உத்தரப்பிரதேசத்தில் தீவிர பிரச்சாரம் செய்யாமல் ஷீலா தீட்சித் ஒதுங்கி கொண்டார்.
இதனிடையே ஷீலா தீட்சித் அளித்த பேட்டி ஒன்றில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்னமும் முதிர்ச்சி அடையவில்லை. அவருக்கு அரசியல் அனுபவம், பக்குவம் தேவை. அதேநேரத்தில் கட்சி வளர்க்கு பாடுபடுகிறார் என்று கூறியிருந்தார்.
Rahul has the sensitivity and concern of a mature leader. His words are those of a young, courageous and restless man. #DontTwistMyWords
— Sheila Dikshit (@SheilaDikshit) February 24, 2017
இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. உடனே ஷீலா தீட்சித் தாம் தெரிவித்த கருத்துகளை திரிக்க வேண்டாம் என்ற ஹேஷ் டேக் மூலம் ராகுல் அனுபவம் மிக்கவர்; அவரது வார்த்தைகள் இளைஞர்களுக்கு ஊக்கம் தருபவை என ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.